திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர் நகரில் இருக்கும் பட்டாசு கடைகளில் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் உரிமம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு எந்திரம், தண்ணீர் பாக்கெட், மணல் பாக்கெட் அவசர வழி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறதா எனவும் சோதனை செய்தனர். இந்த ஆய்வின் போது தீயணைப்பு நிலையை இயக்குனர் மதியழகன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிஸ்வரன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால் உள்பட பலர் உடன் இருந்தனர்.