புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256 கிலோ, சர்க்கரை 67 கிலோ, கோதுமை 288 கிலோ, துவரம் பருப்பு 53 கிலோ, பாமாயில் 37 லிட்டர் ஆகியவை இருப்பு குறைவாக இருந்துள்ளது.

இந்த முறை கேட்டில் ஈடுபட்ட குழந்தைசாமி மீது புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனை அடுத்து தலைமறைவான குழந்தை சாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.