நெல்லை கிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பாக வள்ளியூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா  பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது “தந்தை பெரியார், அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோர் திராவிட தத்துவத்தின் குறியீடு ஆவார்கள். இன்று இவர்களின் அடையாளமாக திகழ்பவர் தான் முதல்வர் ஸ்டாலின். அதுமட்டுமின்றி படிப்படியாக முன்னேற்றமடைந்த நம்முடைய நாட்டின் ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் என ஆ.ராசா தெரிவித்தார்.