மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பூனை புலியை பார்த்து சூடு போட்டுகிச்சான். அந்த கதையாக திருச்சியில் அண்ணன் ஒரு மாநாடு நடத்தினார். உடனே என்ன பண்றாரு ? அத பாத்துட்டு,  இவரு மதுரையில் ஒரு பெரிய மாநாடு,  எழுச்சி மாநாடு அப்படின்னு, ஒரு மாநாட்டை கூட்டி அசிங்கப்பட்டது தான் மிச்சம். கெட்டுப்  போன சாதத்தை போட்டு, அதை ஒரு பக்கம் தூக்கி எரியுறான்.

சாதம் இல்லாமல் சாம்பார் குடிக்கிறாங்க.  என்னத்துக்காக இந்த மாநாடு ?  என்ன எழுச்சி… எல்லாம் உங்ககிட்ட இருக்கு, கட்சி உங்ககிட்ட இருக்கு,  தொண்டர்கள் உங்ககிட்ட இருக்கு. அப்படின்னு சொல்லிட்டு ஏன் மாநாடு நடத்துறது ? கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் நடத்திய மாநாட்டிற்கு எதிர்ப்பாக நடத்தப்பட்ட மாநாடு. இதனை மல்லுக்கட்டி பண்ணியாட்சி.

ஆனா மதுரைக்கு அந்த பக்கம் போக முடியாது, உதைப்பான்.  மதுரையில் காலடி எடுத்து வெச்சி வர்றதுக்கு… போனார், வந்துட்டாரு. எங்க பாரு கட்ட அவுட்.   டிஜிபி கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். ஆகவே ஜோக்கர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து…  அப்புறம் ஒரு விஷயம் தெரியுமா ? தமன்னா கிட்ட கேட்டு இருக்காங்க…

ஒயிலாட்டம் மாதிரி எல்லாம் டான்ஸ் ஆடுனாங்க இல்லையா ? தமன்னா கிட்ட கால்ஷீட் கேட்டார்களாம்.  அந்த அம்மா அழகா சொல்லிட்டு… மூட்டா பசங்க கூட எல்லாம்  வர  முடியாதுன்னு சொல்லிட்டு… அதனால அது கிடைக்கல. பாவம் இவங்களே டான்ஸ் ஆடுறாங்க. பாவம் .. என்னென்னமோ பண்ணி, சொதப்பி… இப்படி ஒரு மாநாடு கேவலமான ஒரு மாநாடு நடத்துறது என தெரிவித்தார்.