செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆளுநர் என்று எடுத்துக் கொள்கிறோம்…  சபாநாயகர் என்று எடுத்துக் கொள்கிறோம் என்றால், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்…. ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள்.. RSS அனுதாபிகளை தான் அவர்கள் ஆளுநராக  நியமிப்பாளர்கள்…  சபாநாயகர் என்பது திமுகவிலிருந்து விலகி   பொதுவாக இருக்க வேண்டும்.. சபையை நடத்துபவர் எல்லாருக்கும் பொதுவாக நடத்த வேண்டும்.

சபையை நடத்துபவர் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லை. இவர் திமுக சபாநாயகராக இருப்பார். அதற்கு முன்னாடி இருந்தவர் அதிமுக சபாநாயகராக இருந்தவர் தான். அதையும் மீறி ஆர்.என்.ரவி போல….  அஸ்ஸாம் ஆளுநர் போல சில பேர் அதையும் மீறி இயங்கி விடுகிறார்கள்… அது ஜனநாயகத்தில் மரபில்லை. அதை கடைபிடிக்க வேண்டும்…  உயர்ந்த பொறுப்புக்கு போகும் பொழுது அதை கடைபிடிக்க வேண்டும்… அதை தவற விட்டு விடுகிறார்கள்…

ஆளுநருக்கு எதிராக”அடங்கி இரு” ”தமிழகத்தைவிட்டு வெளியேறு” என DMK சார்பில் சென்னையில் ஒட்டி இருக்கும் போஸ்டர் குறித்து கருத்து கூறிய சீமான், 

அது சரிதான். அந்த கட்சியே அடித்ததினால் உங்களுக்கு தெரிகிறது… பொதுவான மக்களின் மனநிலையே இதுதான். சாதாரண மக்களிடம் பேச்சு  கொடுத்தாலே,  ஆளுநர் நடந்துகொள்ளும் விதம் யாருக்குமே பிடிக்கவில்லை. இப்போது ஆன்லைன் ரம்மி அந்த விளையாட்டு மக்களை பாதிக்கிறது. பல தற்கொலைகள் நடந்தது என தெரிவித்தார்.