தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று  எல்லாம் பேசிக் கொண்டிருந்த அதிமுக உடைய தலைவர்கள் தற்போது பாஜக உடனான கூட்டணி   இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை ஜெயக்குமார் வெளிப்படுத்தி இருக்கிறார் என புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பாக தொடங்கி சமீப நாட்களாக காரசாரமான வாதம் – பிரதிவாதங்கள் இரண்டு தரப்பும்  வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய பேச்சு தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இது  வீரியமடைவதற்காக காரணமாக புரிந்து கொள்ள முடிகிறது. பாஜகவை ஏன் நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.