அண்ணாவை பேசிய  விவகாரத்தில் அதிமுக பாஜகவிடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளரை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழே தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும்.  அண்ணாமலை  கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறார். தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார். கூட்டணியை  பொருத்தவரை தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.