கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சச்சின் – சஜ்லா. இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டிற்கு சென்றபோது அழுது கொண்டே சென்றுள்ளார். காரணம் மணமகனின் உறவினர் ஒருவர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட செய்துள்ளார்.

இதனால் வலி தாங்காமல் மணமகள் அழுதவாறு மணமகன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இதைப் பார்த்த மகளிர் ஆணையம் தாமாக வந்து விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து உடலுக்கு ஊர் விளைவித்ததாகவும் பெண்மையை மதிக்காததாகவும் கூறி மணமகனின் உறவினர் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோவை காண