உலக அளவில் மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் முன்னணி ஓடிடி தளமாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உள்ளது. இதில் மற்ற ஓடிடி தளங்களை விட பல சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பொருளாதாரம் அந்த நிலை காரணமாக செலவுகளை குறைத்து வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் கடவுச்சொல் பகிர்வை கட்டுப்படுத்த சமீபத்தில் முடிவு செய்தது.

இந்த முயற்சி வெற்றி பெற்ற நிலையில் நெட்பிலிக்ஸ் 6 மில்லியன் புதிய சந்தாதாரர்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக netflix சந்தா கட்டணத்தை உயர்த்துவதற்கு தற்போது முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு அமெரிக்கா மற்றும் கனடாவில் முதல் கட்டமாக அமலுக்கு வர உள்ள நிலையில் இந்தியாவிலும் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.