தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா எதிரிக்கு கூட கொடுக்காத பொருளை தனக்கு குடிக்க கொடுத்ததாக விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது நானும் ரவுடிதான் படத்தை நயன்தாராவிடம் கூறுவதற்காக விக்னேஷ் சிவன் சென்ற போது நயன்தாரா அவருக்கு கிரீன் டீ கொடுத்துள்ளார்.

ஆனால் விக்னேஷ் சிவனுக்கு கிரீன் டீ பிடிக்காதாம். தன்னுடைய எதிரிக்கு கூட கிரீன் டீயை கொடுக்கக் கூடாது என விக்னேஷ் சிவன் நினைப்பாராம். ஆனால் கதை சொல்லும் வேகத்தில் நயன்தாரா கொடுத்ததால் வேறு வழியின்றி டீயை குடிப்பது போன்று விக்னேஷ் சிவன் நடித்துள்ளார். முதல் சந்திப்பு என்பதால் நயன்தாராவிடம் தனக்கு கிரீன் டீ பிடிக்காது என்பதை விக்னேஷ் சிவன் கூறவில்லை. மேலும் நன்றாக பழகிய பிறகு தனக்கு கிரீன் டீ பிடிக்காது என்பதை நயன்தாராவிடம் கூற அதன் பிறகு அவர் அதை கொடுப்பதே கிடையாது என்று கூறியுள்ளார்.