தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இந்த படத்திற்குப் பிறகு சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் சேர்ந்து அபர்ணா பாலமுரளி நடித்த சூரரைப் போற்று படத்திற்காக நடிகை அபர்ணாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த வருடம் தமிழில் நித்தம் ஒரு வானம் திரைப்படம் அபர்ணா பால முரளி நடிப்பில் வெளியானது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக அபர்ணா பாலமுரளி வலம் வரும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்துடன் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படத்தை அபர்ணா வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் கொச்சிக்கு விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் நடிகை அபர்ணாவும் இருந்ததால் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.