தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ப்ரீத்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு கேளடி கண்மணி, வள்ளி, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை காதலிக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் நடிகர் கிஷோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் விருதும் கிஷோருக்கு கிடைத்தது. இந்நிலையில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை ப்ரீத்தி காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கிஷோர் தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.