தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் கடந்த 2002ம் வருடம் வெளியாகிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

அதோடு சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார் செல்வராகவன். இதனிடையே சமூகவலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை செல்வராகவன் பதிவிட்டு வருகிறார். அதன்படி அவர் இப்போது பதிவிட்டு இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதாவது அனுபவத்தில் கூறுகிறேன், நல்ல நண்பர்களை மட்டும் இழந்துவிடாதீர்கள். எனக்கு நண்பர்கள் கிடையாது. 23 ஆண்டுகள் வேலையை தவிர்த்து எதையும் யோசித்ததில்லை. எங்கு சென்று நட்பை தேடுவேன் என பதிவிட்டு உள்ளார். இவரது இப்பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.