சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி விமானம் சென்று உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் எமர்ஜென்சி கதவை தொட்டுப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த விமான சிப்பந்திகள் உடனே இளைஞரை தடுத்துள்ளனர். அதோடு சம்பவம் குறித்து விமானிக்கு, சிப்பந்திகள் தகவலளித்து உள்ளனர்.

விமானம் தரை இறங்கியதும் இதுபற்றி விமான ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவலளித்துள்ளனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவரிடம் விசாரணை நடத்திவிட்டு திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, பயணத்தின்போது தெரியாமல் விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட்டை தொட்டுப் பார்த்ததாக பொறியியல் மாணவர் தெரிவித்ததாக கூறினர். அதோடு சம்பவம் குறித்து மாணவர் கைது செய்யப்படவில்லை எனவும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டியிருக்கும் எனவும் காவல்துறையினர் கூறினர்.