பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை அடுத்து டைரக்டர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “பகாசூரன்”. இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். சாம் சிஎஸ் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இதில் ராதாரவி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ், தரக்‌ஷி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் பகாசூரன் படத்தை பார்த்து தன்னை பலரும் பாராட்டுவதாக நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர் விட்டு அழுதார். இப்படத்தை ப்ரீமியர் ஷோவில் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் தன்னை அழைத்து பெரிதும் பாராட்டினர். அதாவது, “இனி தியேட்டர்களில் சென்று எதுவும் பேசாதே. நடிப்பில் மட்டும் கவனம் செலுத்து. இந்த படத்தில் உன் நடிப்பு அழகாக இருக்கிறது” என பாராட்டியதாக கூல் சுரேஷ் கண்கலங்கினார்.