திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இப்போது நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்குகிறார். இதன் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டைரக்டர் வெற்றிமாறன், நடிகர்களை தலைவர்கள் என சொல்வது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “எம்ஜிஆர் அளவிற்கு எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் இல்லை என கூறுவார்கள். அவருக்கு முன்னாடி இருந்தவர்களும் அப்படிதான் இருந்தார்கள். நாம் கதாநாயகர்களை, கதாநாயக பிம்பங்களை கொண்டாடி வருகிறோம். எப்போதும் நாம் அப்படி தான் உள்ளோம். இதற்கிடையில் நடிகர்களை தலைவர் என சொல்வது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.