தமிழ் திரையுலகில் உச்ச நச்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. தொடக்கத்தில் இப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பின் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடித்துள்ளார். இதனிடையில் வாரிசு படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துகொண்டிருந்த வேளையில் சரத்குமாரின் செயலானது, விஜய்யை முகம்சுளிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரி நடிகர் விஜயை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். இவர் மீண்டுமாக தளபதியை வைத்து படம் தயாரிக்கவேண்டும் எனும் நோக்கில் பல முறை அவரிடம் அதுகுறித்து பேச முயன்றுள்ளார். எனினும் விஜய் பிஸியாக நடித்து வந்ததால் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆர்.பி.சௌத்ரி, அவரின் விருப்பதை சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது சரத்குமார் அவருக்கு உதவி செய்வதாக சொல்லி ஆர். பி. சௌத்ரியை விஜய்யின் ஒப்புதல் இன்றி வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துள்ளார். இதற்கிடையில் ஆர்.பி.சௌத்ரியின் வருகையை சற்றும் எதிரிபார்க்காத விஜய், முறையாக ஒப்புதல் வாங்காமல் வந்ததால் கோபமடைந்தார். ஆனால் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஆர்.பி.சௌத்ரியிடம் சுமுகமாக பேசினாராம் விஜய். எனினும் இதற்கு காரணமான சரத்குமாரின் செயலானது விஜயை முகம்சுளிக்க வைத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.