பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து தைப்பூச கொடியேற்றம் நடத்தப்பட்டு கடந்த 5 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் பழனி கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்ற வாரம் நடிகைகள் அமலாபால், சமந்தா, நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன் உட்பட பெரும்பாலானோர் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இன்று(பிப்,.22)  நடிகர் சந்தானமும் அந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து அவருடன் பெரும்பாலான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.