நடிகர் ராம் சரண் தெலுங்கு  சினிமாவில் அறிமுகமான நேரத்தில் கடந்த 2009-ல் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிய “மகதீரா” எனும் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. அதோடு தென்னிந்திய அளவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிய அந்த படம் அவரது ரசிகர் வட்டத்தை அதிகப்படுத்தியது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் ஒற்றை ஆளாக எதிரிகள் 100 பேரை சவால்விட்டு ராம்சரண் கொல்கின்ற காட்சி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து தான் அவருக்கு கமர்சியல், மாஸ் படங்கள் தேடி வந்தன. அந்த திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது  ராம்சரணின் புகழ் அந்த சமயத்தில் இருந்ததை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் வருகிற மார்ச் 27ம் தேதி ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படம் ரசிகர்களின் கோரிக்கையின் பேரில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.