சூப்பர் சிங்கர் தொடரை தொகுத்து வழங்குவதில் இருந்து மாகாபா ஆனந்த் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாபா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர். அதுமட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில்  சீசன் 9 தொடங்கியிருக்கும் நிலையில் இந்த செய்தி சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக பிரியங்காவுடன் இணைந்து ரியோ ராஜ் சூப்பர் சிங்கரை தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ஒரு எபிசோடை மட்டுமே ரியோ தொகுப்பார் என்றும் கூறப்படுகிறது.