கேரளா கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில் 110 ஏக்கரிலுள்ள குப்பை கிடங்கில் சென்ற 2ம் தேதி ஏற்பட்டது தீ விபத்தால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மலையாள நடிகரான மோகன்லால் 6 வருடங்களுக்கு முன்னதாக எழுதிய ஒரு கடிதமானது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு 6 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், முதல்-மந்திரி படிக்கவேண்டும் என்ற தலைப்பில் கேரளா எதிர்கொள்ளும் குப்பை பிரச்சினை பற்றி மோகன்லால் விவரித்துள்ளார். கேரளாவை அச்சுறுத்தும் மிகப் பெரிய பயங்கரவாதி யார் எனில், அது குப்பையாக தான் இருக்கும் என அந்த கடிதத்தில் மோகன்லால் குறிப்பிட்டு உள்ளார். பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ விபத்தை அடுத்து, மோகன்லாலின் இந்த கடிதம் தற்போது சமூகவலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.