லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் தான் பேசியது தொடர்பாக முதலில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவை சபாநாயகரை சந்தித்து தன் மீது 4 அமைச்சர்கள் வைத்த குற்றச்சாட்டு குறித்து அவையில் பேச அனுமதி கேட்டுள்ளதாக ராகுல் கூறினார். எனினும் நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதானி விவகாரம் குறித்து தான் பேசியது நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாடினார்.