மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், சுமார் 20 முதல் 25 முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று, வாள்கள் (Swords), கம்புகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளுடன் ஒரு கஃபேக்குள் புகுந்து, வன்முறைத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
போபாலின் ஹோஷங்காபாத் சாலையில் (Hoshangabad Road) உள்ள மேஜிக் ஸ்பாட் கஃபே (Magic Spot Cafe) மீது நவம்பர் 18 ஆம் தேதி இரவு இந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ये मध्यप्रदेश की राजधानी भोपाल है और यहां कानून का राज है! pic.twitter.com/vNsYr0eFnH
— Anurag Dwary (@Anurag_Dwary) November 19, 2025
சிசிடிவி காட்சிகளும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் தகவல்களும், இந்தத் தாக்குதல் குறித்து வெளிவந்துள்ளன. முகமூடி அணிந்த இந்தக் கும்பல் கஃபேக்குள் நுழைந்து, அங்கிருந்த அலங்காரப் பொருட்கள், கண்ணாடிக் கதவுகள், கவுண்டர்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் அனைத்தையும் சில நிமிடங்களுக்குள் அடித்து நொறுக்கியது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் கஃபேயின் ஊழியர் ஒருவருக்கு வாளால் காயம் ஏற்பட்டதுடன், ஒரு வாடிக்கையாளரின் விரல் முறிந்தது என்றும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் நடந்தபோது, கஃபேயில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பதற்றத்துடன் தப்பி ஓடினர்.
