திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு முறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெளியான செய்தி குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின்படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சராக டி ஆர் பி ராஜா அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் இருக்கும் ராஜ்பவனில் வைத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அவர்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இன்று காலை 10:30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் டிஆர்பி ராஜா பேட்டி அளித்த போது திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப தனது செயல்பாடுகள் இருக்கும் என கூறியுள்ளார்.