யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதி தான் பொம்மன்-பெள்ளி. நேற்று முதுமலை தம்பதியினர் பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் தாயை இழந்து சுற்றித் திரியும் இரண்டரை மாத குட்டி யானையை முதுமலை தம்பதியினர் வளர்க்க உள்ளதாக முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் கூறியுள்ளார். மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த இடத்தில் சுற்றித் திரியும் அந்த குட்டி யானை இன்று இரவு தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்பட உள்ளது.