தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜன,.17 ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது தொடர்பாக ம.தி.மு.க-வின் வைகோ கடிதம் எழுதி உள்ளார். அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என தொடங்கும் அக்கடிதத்தில், “பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோர்ச்சா அமைப்பில் நிர்வாகியாகவுள்ள இவர், மத வெறியை தூண்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது பற்றி திரு.வைகோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய, கிருத்துவ மதங்களுக்கு எதிராக விக்டோரியா கௌரி பேசியிருப்பதை குறிப்பிட்டு, சிறுபான்மை சமூகத்தின் மீது இத்தகைய வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு கொல்ஜியம் பரிந்துரைத்து இருப்பது கவலையளிக்கிறது. ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள், இவ்விவகாரத்தில் தலையிட்டு விக்டோரியா கௌரி அவர்களின் நியமனத்தை திரும்பப்பெற கொல்ஜியம் உள்ளிட்ட உரிய அதிகார அமைப்புகளை வலியுறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று மதிமுக தலைவர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.