நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளானது செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நீங்களும் பயணம் செய்பவராக இருப்பின், உங்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பு மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இனிமேல் பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும். ஏனென்றால் தற்போது டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்திருக்கிறது.

இந்த சிறப்பு வசதியை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில அரசாங்கத்தால் ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்குரிய பேருந்து டிக்கெட் கட்டணம் 50% குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மூத்தக்குடிமக்களுக்கும் இவ்வசதி அளிக்கப்படுகிறது. ஹரியானாவில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ள பேருந்தில் பயணம் செய்யும்போது, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஹரியானாவின் குடியிருப்புச் சான்றிதழைக் காட்டவேண்டும்.

அதோடு இந்த சிறப்பு வசதி ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கிடையில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். இது தவிர்த்து மூத்தக்குடிமக்களுக்கும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.