திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் பகுதியில் ராஜ்குமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் சோபனாபுரத்தைச் சேர்ந்த சாரதா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதில் ராஜ்குமார் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக உள்ளார். தற்போது வைக்கோல் சுற்றும் எந்திரமும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சோபனாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து ராஜ்குமார் விவசாயம் செய்து வந்துள்ளார். அங்குள்ள வீட்டில் கணவன், மனைவி இருவரும் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து சாரதாவும் ராஜகுமாரும் இரவு நேரம் தோட்டத்தில் வீட்டில் தங்கினர். நேற்று காலை விஜயசேகரன் தோட்டத்து வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றபோது கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதே கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் கத்தியால் தம்பதியினரின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.