சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்தார். இந்நிலையில் மானாமதுரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், தார் சாலை உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிவகங்கை ரோட்டில் இருந்து அண்ணாமலை நகருக்கு எளிதாக செல்லும் வகையில் சுப்பன் கால்வாய் அருகே புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு தலைவர் மாரியப்பன் அறிவுறுத்தியுள்ளார்.