சேலத்தில் அதிமுக பூத்து கமிட்டி உறுப்பினர் கூட்டத்தில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய தினம் மக்களை நேரில் சந்தித்து நம்முடைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை நீங்கள் விளக்கி சொல்லுகின்ற போது அது நம்முடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருக்கும்.  நிற்கின்ற நம்முடைய வேட்பாளர்களுக்கு அந்த நபர் வாக்களிப்பார். அதோடு இரண்டரை ஆண்டு மக்கள் விரோத திமுக ஆட்சியில் நடக்கின்ற அவலங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 2021 ஆம் ஆண்டு இன்றைய முதலமைச்சர்,  அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருந்த பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில்  520 அறிவிப்புகள் வெளியிட்டார்கள்.

இப்பொழுது முதலமைச்சர் பேசுகிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 95% அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என்று ஒரு பச்சை பொய்யை இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறார். இது மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதற்கு தங்களுக்கு கையேடுகள் நாங்கள் கொடுக்கப் போறோம். என்னென்ன அறிவிப்புகள் வெளியிட்டிருக்கின்றார்கள் ? திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை விடியா திமுக ஆட்சி என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்ற புள்ளி விவரத்தோடு மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.