பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாக்கூர். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் மிகவும் சென்சேஷனல் ஆன ஹீரோயினாக மாறியுள்ளார். சீதாராமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் மிருணாள் தாக்கூர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் நானியின் 30-வது படத்திலும் நடிகை மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் சூர்யா 42 படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை மிருணாள் தாக்கூரின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஒரு படத்திற்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் ராஷ்மிகா மற்றும் திரிஷா ஆகியோரே 3 முதல் 4 கோடி ரூபாய் வரை தான் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான மிருணாள் தென்னிந்திய சினிமாவில் நடிக்க 6 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் பாலிவுட் சினிமாவில் நேற்று கும்ராக் எனும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.