தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு முன்பே திருமணம் ஆகியிருந்த நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறார். எனினும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் சீரியலில் இணைந்து நடித்த அர்ணவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திவ்யா ஸ்ரீதர்.

சென்ற சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்திருந்தார். பொருளாதார நிலைமை காரணமாக பிரசவம் வரை சீரியல் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதருக்கு இப்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பான இவரது பதிவு இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)