தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலுவின் காமெடி குழுவில் ஒரு நடிகராக இருந்தவர் தான் சுப்புராஜ். இவர் மருதமலை திரைப்படத்தில் சாரப்பாம்பு என்ற தனது பெயரை சொல்லும் காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சாரப்பாம்பு சுப்புராஜ் என்று அழைக்கப்படும் இவர் நேர்காணல் ஒன்றில் பேசும்போது சினிமாவில் தான் சந்தித்து அனுபவங்கள் குறித்து பகிர்ந்தார். அப்போது, விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசினார்.

எனக்கு சாப்பாடு போட்டு வளர்த்து விட்டவர் விஜயகாந்த். அவர் தர்மம் செய்தவர், எத்தனையோ பேரை வளர்த்து விட்டார் விஜயகாந்த், அவரை தவறாக பேசக்கூடிய தகுதி யாருக்கும் இல்லை. விஜயகாந்தை பற்றி தவறாக பேசியதால் வடிவேலுவுடன் நடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.