ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த ராஸ்மிதா என்பவரது கணவர் பலராம் கௌடா, இத்தம்பதிக்கு ஒன்பது வயது மகள், ஐந்து வயது மகன், 10 மாத பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருந்தனர். ராஸ்மிதா தனது கணவர் பலராமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன் மனைவி இருவரும் தொலைபேசியில் சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

இதை அடுத்து மிகுந்த வேதனைக்குள்ளான ராஷ்மிதா தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து  தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கிணற்றில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது ராஷ்மிதாவும் அவரது ஒன்பது வயது மகளும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து அவ்விருவரையும் மீட்டனர்.

ஆனால் அவரது ஐந்து வயது மகனையும் 10 மாத பெண் குழந்தையும் மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து சிறுவனையும் குழந்தையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.