உத்தரப் பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவபதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது 14 வயது மகள் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவருடன் பழகி வந்தது சிவபதிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இது குறித்து தனது மகளை கண்டித்த போதும் அவர் தொடர்ந்து சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவபதி தனது மற்றொரு மகள் மற்றும் உறவினரான மீராவுடன் சேர்ந்து கோடாரியால் தாக்கி 14 வயது மகளை கொலை செய்தார்.

அதன் பிறகு தனது மகள் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த போது ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் சிறுமியின் சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சிவபதி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தனது மகளை கொலை செய்ததாக சிவபதி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கொலைக்கான காரணத்தையும் கூறியுள்ளார்.