டெல்லியில் உள்ள ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் திவான்ஷு சோப்ரா என்ற 35 வயதுடையவர்.தனியார்  வங்கி ஒன்றில்  அதிகாரியாக இருந்த அவர், அமிர்தசரஸில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

தற்கொலை: திவான்ஷு சோப்ரா டெல்லி ராஜீவ் சவுக் மெட்ரோ நிலையத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து ஒரு முழுமையான விசாரணையை மேற்கொண்ட போதும், சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு மற்றும் அதற்கான காரணம் எதுவும் அப்போது கிடைக்கவில்லை. 

பயண வரலாறு: அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பவம் நடந்த அதே நாளில் திவான்ஷு அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். எனவே குடும்ப சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என யூகித்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.