
கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த புதன்கிழமை ஒரு சிறுவன் தனது தாயுடன் சென்றிருந்தார். அப்போது 9.30 மணி அளவில் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் 11 வயது சிறுவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் இறந்ததாக ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முதலுதவியாளர்களுடன் சிறுவனை உடனடியாக பரிசோதித்தனர். அப்போது அவர்கள் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று கூறினர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு கத்தி சம்பவ இடத்தில் கிடைத்தது. பின்னர் அந்த சிறுவனின் தாயிடம் விசாரித்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது.
அதாவது அந்த தாய் மன அழுத்தத்தில் இருந்ததால் வேதிப்பொருளை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் தன்னுடைய மகனை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் தன்னை அறியாமலேயே தன் மகனை கொலை செய்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது சிறுவனின் தாயை போலீசார் கைது செய்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.