ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரஸ்வதியும், பூமணியும் சடையக்காட்டு தோட்டத்திற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து காஞ்சிக்கோவில் பூச்சம்பதி அருகே சென்ற போது மொபட்டும், எதிரே வந்த சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரஸ்வதி மற்றும் பூமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தாய்-மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவர் சூர்யா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.