கடலூர் மாவட்டத்தில் உள்ள கொழை கிராமத்தில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் டேனியல் விருதாச்சலம் கடைவீதியில் இருக்கும் நகை கடையில் 4 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ஸ்ரீ முஷ்ணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் பையில் இருந்த 4 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு டேனியல் அதிர்ச்சியடைந்தார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் பையில் இருந்த தங்க நகையை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டேனியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.