செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, தந்தை பெரியார், பேரஞர் அண்ணா,  டாக்டர் கலைஞர்,  எங்கள் இயக்க தலைவர் வைகோ,  ஏன் ? அண்ணல் அம்பேத்கர் இவர்களெல்லாம் போராட்டம் எதற்காக.. ?  இந்து மதத்திற்கு எதிராக அல்ல…. இந்து மதத்தில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களால்…. அதை திரித்து…  அவர்களின் வசதிக்கு ஏற்றமாதிரி  ஜாதியை ஏவுறது… பெண்கள்  வீட்டைவிட்டு போகக்கூடாது….

பெண்களுக்கு கல்வி இருக்க கூடாது …… பெண்கள்  கணவர்களை இழந்தால் உடன்கட்டை ஏற வேண்டும். இதுபோன்ற சில முறைகள் இருந்தன. அது காலங்காலமாக இருந்தது. இதை  நிறுத்துனது  திராவிடம்.  இது போல இருக்க கூடாது என அம்பேத்கர்   நிறைய சட்டங்கள் கொண்டு வந்துருக்காங்க. இது போன்ற கலாச்சாரத்தை தான் சனாதன கலாச்சாரம் என்று… இதுமாதிரிலாம் இருக்க கூடாதுனு சொல்லி தோழர் உதயநிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

வட இந்தியாவை  பொறுத்த வரைக்கும்…. உதயநிதி தமிழில் சொன்னதை… ஹிந்தியில் மொழி பெயர்த்து….  அவர் ஏதோ இந்துக்களுக்கு எதிரிகள்  போல…  தமிழ்நாட்டில் உள்ள திராவிடர்கள்,  திராவிட இயக்கங்கள்.  திமுக,  அதிமுக  எல்லாரும் சேர்த்துதான் சொல்லுறேன். அதிமுக இதுல தவறான கூட்டணி வச்சி இருக்காங்க. அவங்களையும் சேர்த்து தான்  சொல்லுறேன்.

எல்லா திராவிட இயக்கங்கள் எல்லாம்  இந்து மதத்துக்கு… இந்துக்களுக்கு  எதிரானவர்கள் அப்படிங்கற ஒரு பிரச்சாரம் வட இந்தியாவில் நடந்துகிட்டு இருக்கு. எதுக்கு இந்த நேரத்துல 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வருது.  மத்திய அரசினுடைய சில பல குறைபாடுகள், பெயிலியர்ஸை  மறைப்பதற்காகாக  இது ஒரு திசை திருப்பம், வேற ஒன்னும் கிடையாது என தெரிவித்தார்.