பிரதமர் மோடி வருகின்ற பிப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் 11-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி பாரிசில் நடைபெற இருக்கும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார். இப்பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க இருக்கும் மோடி இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். அதன் பின் 4 மாதங்களுக்கு பிறகு இருநாட்டு தலைவரும் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.