இந்தியாவில் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீங்கள் மாதாந்திர திட்டங்களை தேடும் போது 28 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் திட்டங்களை அதிகமாக பார்ப்பீர்கள். ஏன் முப்பது நாட்களுக்கு பதில் 28 நாட்கள் என்று பலருக்கும் யோசனை வந்திருக்கும். 28 நாட்கள் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தும் பயனர்கள் என்றால் ஒரு வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 12 மாதங்கள் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்த 13 வது ரீசார்ஜ் திட்டத்தின் மூலமாகத்தான் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன.

அதனைப் போலவே 84 நாட்கள் திட்டத்தை பயன்படுத்தி வரும் பயனர்கள் வருடத்திற்கு நான்கு முறை ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் மட்டுமே சேவையை பெறலாம். நாம் விலை எவ்வளவு குறைவாக பார்க்கிறோமோ அதற்கு ஏற்றது போல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. நுகர்வோரின் வேண்டுகோளை ஏற்று டிராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாதாந்திர திட்டத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனால் ஜியோ 30 நாட்கள் திட்டத்தை 259 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதனைப் போலவே மற்ற நிறுவனங்களும் மாதாந்திர திட்டமாக மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.