மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ இடத்தில் 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் புத்த பிச்சுகள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான கூடுதல் தகவல் எதையும் மியான்மர் ராணுவம் வெளியிடவில்லை. இருப்பினும் இது இனப் படுகொலை நடவடிக்கையாக இருக்கு என மியான்மர் ராணுவம் தெரிவித்து உள்ளது. அதே சமயத்தில் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.