தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் அறிமுகமான பாவனா, பின் வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். இறுதியாக அஜித்தின் அசல் திரைப்படத்தில் நடித்து இருந்தார் பாவனா. இதையடுத்து அவர் தமிழில் நடிக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டுமாக புது தமிழ் படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாவனா.

ஜெய்தேவ் டைரக்டு செய்யும் இந்த திரைப்படத்தில் நாயகனாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். கொடைக்கானலில் பாவனா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் ஹாரார் த்ரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது.