நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென்ஸ் ஸ்டோக்ஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் நான் ஐபிஎல் விளையாடுவேன் என ஸ்டோக்ஸ் சமீபத்தில் கூறியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. ஆனால் ஐபிஎல் முடிந்த பிறகு ஆசஸ் தொடர் ஜூன் 16ஆம் தேதி துவங்க உள்ளது. எனவே இந்த தொடருக்கு இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மிக முக்கிய வீரராக நம்பப்படுகிறார். ஆனால் தற்போது முழங்கால் காயத்தால் அவதிப்படும் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாடினால் அது பணி சுமையை அதிகரிக்கும்.

இதனால் காயம் பெரிதாகி அவர் ஆசஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழப்பார் என கருத்துக்கள் கிளம்பிய நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கோச் பென்டன் மெக்குலம் வெளிப்படையாக பேசி உள்ளார். சிஎஸ்கே நிர்வாகம் மிகவும் சிறப்பானது. வீரர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். அதிலும் சிஎஸ்கே-வின் மருத்துவ சேவை குழு பல வசதிகளை கொண்டுள்ளது. இதனால் அவர்கள் ஸ்டோக்சை சிறப்பாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுபோல ஸ்டோக்ஸ் பெரிய போட்டிகள் வரும் நேரத்தில் எப்படி சிறப்பாக தயாராக வேண்டும் என்று தெரியும். அவரது வாழ்க்கையே இது தான் என்று சிறப்பாக பேசியிருந்தார் கோச் மெக்குலம்.