நரேஷ்-பவித்ரா லோகேஷ் திருமணமானது சென்ற சில மாதங்களாகவே தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு பின் துபாய்க்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவரான சுசேந்திர பிரசாத் மவுனம் கலைத்திருக்கிறார். அதாவது, பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார்.

அந்த வாழ்க்கைக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். மேலும் அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமான திட்டம் போட்டுள்ளார். அவரின் ரூபாய்.1500 கோடி சொத்தை அபகரிப்பதற்காக நரேசுடன் திருமண நாடகம் தொடங்கி உள்ளார். பணத்திற்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா லோகேஷ். ஆனால் நரேஷ்க்கு இது இன்னும் தெரியவில்லை. நரேஷின் 4-வது மனைவி பவித்ரா லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.