நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா டைரக்டில் தன் 42வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருகிறது. இந்த படத்தில் சூர்யா பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானியும் நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் சூர்யா 13 வேடங்களில் நடிப்பார் என கூறப்பட்டது. எனினும் தற்போதைய தகவலின் படி, அவர் 5 (அல்லது) 6 வேடங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் பீரியட் போர்ஷன் முடிந்து அடுத்த கதாபாத்திரங்களை விரைவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு சிறப்பு காட்சி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே. விமான சண்டை படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் புரோமோ வீடியோவை கூடிய விரைவில் வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

அதோடு படத்தை பொன்னியின் செல்வன் பாணியில் 2 பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.