கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திவான் சாபுதூர் விநாயகர் கோவில் வீதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ராதாகிருஷ்ணனின் மனைவி தனது மகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் ராதாகிருஷ்ணன் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.