பாகுபலி திரைப்படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக வலம் வருபவர் ராஜமவுலி. இதையடுத்து அவரது இயக்கத்தில் வந்த ஆர்ஆர்ஆர் படமும் உலகளவில் பேசப்பட்டு ஆஸ்கார் விருது வென்றது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜமவுலியிடம், மகாபாரதம் கதை தொலைக்காட்சியில் 266 எபிசோடுகளாக ஒளிபரப்பாகியது. நீங்கள் அதை படமாக்கும் போது எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து ராஜமவுலி கூறியதாவது “இது மிகவும் பெரிய படம். மகாபாரதம் எடுத்தால் கண்டிப்பாக 10 பாகங்களாக எடுக்கவேண்டி வரும் என நினைக்கிறேன். எனினும் எத்தனை பாகங்களாக வரும் என்பதை தற்போதே சரியாக கணிக்க முடியாது. இப்போது ஒரு படம் எடுப்பதற்கு எனக்கு கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அந்த வகையில் மகாபாரதம் எடுக்க இன்னும் 10 (அ) 12 வருடங்கள் ஆகலாம்” என்று பதிலளித்தார்.