மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் என பல வகைகளில் விலைமதிப்பில்லா உழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவார்கள். மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கவுள்ள மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டம் தொடர்பாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதோடு சமூகத்தில் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருப்பார் என்று சொல்வதுண்டு. ஆணின் உழைப்பை விட பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் கிடையாது. வீட்டிலும் வெளியிலும் பெண்கள் பல மணி நேரம் உழைக்கிறார்கள். அதற்கெல்லாம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொடுத்திருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.